08/01/2011 - 09/01/2011

Thursday 25 August 2011

அன்னா கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு


புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடைபெற உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதி 193ன் படி, இந்த மசோதாவிற்கான விவாதங்கள் நடைபெற உள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.


Wednesday 24 August 2011

KARUR TOP TWO TEMPLE




 THANTHONI KALYANA
VENKATRAMANA SWAMY
 KARUR PASUPATHISWARAR
TEMPLE
Kalyana Venkattaramasami Temple:The Kalyana Venkattaramasami temple at Thanthoni, about five KM from Karur is one of the most popular temples in the district. The shrine of the Lord is situated on a raised portion of a hillock. The temple is also known as Then (south) Tirupathi. 
Pasupathieswarer Temple:Karur town is one of the seven sacred sthalams (place) of Sivalayams and is well known for famous Pasupathieswarer Temple. The group of sculptures representing Pasupathiswaralingam as high as five feet, bathed by the milk oozing from the rudder of a cow and Rangamatha are noted for sculptural beauty 
Other Temples:The temple in Pugalur situated north west of Karur dedicated to Lord Subramania on a small hill at Velayuthanpalayam near Cauvery is famous for excellent sculpture. Sri Mariamman Temple is a famous one, which is situated in the heart of the city. It is celebrated periodically during the month of May by all groups of people, irrespective of caste and creed,taking the �Kumbum� from the temple to the 
Amaravathi river is the glorius one.

KARUR ALL TEMPLES DETAIL SOONLY

Tuesday 23 August 2011

TODAY SPECIAL அருகம்புல் சாறு



அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது. 

WORLD 1ST BIRTH GRASS


Bermuda grass or arugampul juice has wonderful medicinal properties. It acts as an excellent detoxifier.

The credit for increase in the lifespan of human beings can undeniably be attributed to the conventional system of medicine. With its excellent diagnostic methods and thorough knowledge of human anatomy, allopathic system has virtually eliminated most of the dreaded diseases from the planet earth. In the process, more potent and powerful drugs were made to combat more virulent variations. The expensive medicinal system burnt a hole in the average Joe’s pocket. Also these drugs had dangerous side effects. What were once hailed as wonder drugs were later derided and shunned within a couple of years due to the side effects. This forced people to look into the direction of alternative systems. In Siddha system of medicine, arugampul is used to detoxify the body of these dangerous drugs. For this purpose, arugampul is collected and the knots in the grass are removed. Ten grams of this grass is then ground to a fine paste along with white pepper. This paste is then added to butter and taken on empty stomach early in the morning for three consecutive days. This is said to neutralize and remove toxins from the body. This also useful in cases of itching due to allergies.

Bad eating habits, environmental pollution, contaminated water, air etc can cause many diseases especially, skin problems. Skin diseases that manifest as a result of impurities in blood can be cured by Bermuda grass. For this turmeric, arugampul, basil leaves, rock salt and chebulic myrobalan are collected in equal quantities, ground to a fine paste, applied on the affected areas and after half an hour, can be washed away. Regular application of this paste helps in curing these diseases.

Bermuda grass is also found to be effective in curtailing blood loss. Be it blood loss due to an injury, or nosebleed, or excessive menstrual flow, these all can be treated with Bermuda grass or arugampul. In case of injury, arugampul paste can be applied on the wounded area. A couple of drops of Bermuda grass juice can help nosebleeds. Regular intake of arugampul juice is found to cure excessive menstrual flow.

Consumption of oily substances is a strict no, no for heart patients. They are advised to take chapattis. While preparing chapattis, arugampul juice can be used instead of water. This is also an ideal diabetic diet. Also 10-15 neem leaves along with a handful of arugampul can be ground to a fine paste with a few drops of water. This juice is effective in curing diabetes if it is of recent onset. In chronic case of diabetes, this juice helps in keep the sugar levels in control.

Research is going on in the western world on the medicinal effects of arugampul. 


This grass is indeed a blessing to the ailing humanity.
For more detail please send my email:rtrkarur@gmail.com

8TH DAY ANNA HAZARE


புதுடில்லி: வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப்போராட்டம் 8வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து அவருக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தியும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் மூலம் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Saturday 20 August 2011

A TO Z CONSULTING


1.INVESTMENT IDEA
2.LOCATE VERIFICATION
3.BUSINESS IDEA
4.LIVE IN MARKET IDEA
5.HEALTH ADVICE AND NATURAL MEDICINE
ANY OTHER PROBLEMS PLEASE CONTACT :rtrkarur@gmail.com

PLEASE DONATE

T RAMESHKUMAR
ACCOUNT NO.607201509253
BANK NAME: ICICI BANK LTD
BRANCH: KARUR
IFSC CODE:ICIC0006072
MICR CODE:639229002

.


MY DEAR FELLOW INDIANS


MY DEAR FELLOW INDIANS: A decisive battle against corruption has begun. We are not
against any political party. We want systemic reforms. We want a
corruption-free India.
After all, what are the people asking for – a strong anti-corruption
law which provides for honest and time-bound investigations and
trials that result in jail for the guilty, confiscation of embezzled
money and their dismissal from service?
Are we asking too much?
For two months, we were talking to the government.
Government seems unwilling to take even small steps against
corruption. Government appears insincere. We have met all
prominent political leaders. We have tried everything.
What do we do now? When I announced my indefinite fast from
th 16 August, the government threatened that they would crush us
the way they crushed Baba Ramdev's peaceful agitation.
Friends, this is a historic opportunity. We can't afford to lose it. We are determined to fight to the end. If they
arrest us, we will peacefully offer ourselves. If they use batons and bullets, we will happily lay down our lives
but will not leave the place. We will not retaliate. It will be a completely non-violent movement.
th “If you fast on 16 August, you will be crushed” – this is what they are saying. “We will impose section 144 on
Jantar Mantar” – this is what they are thinking. But I say that if every citizen in this country takes off from his
th work from 16 August, comes on the streets in front of his house, at the crossing, with a tricolor in his hands
shouting “Bharat Mata ki Jai” and raising slogans against corruption, they will fall short of batons and bullets.
The government may arrest one Anna Hazare but how will they arrest 120 crore Anna Hazares? They may
impose section 144 at one Jantar Mantar but will they impose section 144 on the whole country?
And let me tell you – the police and army is with us. At traffic signals, policemen stop us, express their support
and wish us well; at Raj Ghat, the policemen donated generously for the movement!
th So, will you take off from your work from 16 August? Will you descend on the streets with me?
th th This year, the country will wait for 16 rather than 15 August.
In solidarity,
Anna Hazare
My Dear Fellow Indians
(Please make copies of this pamphlet and distribute it in large nos.)
The government's Lokpal bill covers about 0.5% of
public servants, yet it brings under its ambit virtually
every citizen's group and organization, registered or
unregistered, meant to serve the social sector. This
raises a pertinent question -- whom is the Lokpal really
targeted at?
There are more than 1.25 crore central and state
government employees. Out of this merely 65,000
Group A Central Government employees would be
covered in the government bill leaving out all the lower
officers and staff. This effectively means that there is
no remedy against corruption that a common person
faces daily in police, roads, industry, licensing,
transport, roadways, municipality, rations, health
services, education, pension, provident funds,
Panchayat, forest department, irrigation department,
etc.
On the other hand, Lokpal would have jurisdiction over
all NGOs, trusts, societies like RWAs, big or small,
whether registered or unregistered, whether they
Government's Lokpal is targeted against those who raise their voice rather than to punish the corrupt!
receive government funding or not, up to the village
level! For instance, consider a group of citizens that
unearths corruption of the Sarpanch and Block
Development officer (BDO) in a village. The
government's Lokpal can't take any action against the
Sarpanch or BDO but it can lock up the group of active
citizens. Each and every association, like Resident
Welfare Associations, Market Associations, even your
neighbourhood committees that organize festivals like
Durga Puja, Ramlila, etc. would be under the purview
of Lokpal.
While there is no disagreement that the rot of
corruption is also afflicting many societies, associations
and NGOs, there already exists a plethora of laws like
the Trust Act, Societies Act, FCRA, etc. to monitor
them. Lokpal was originally intended for checking
corruption in public servants. Regardless, if it is being
extended to all associations of civil society, then why
shouldn't it also cover all companies, businesses,
political parties, and media houses?
Government's Lokpal Provides Greater Protection to Corrupt!
Provisions in the government's Lokpal Bill heavily favour corrupt public servants. Under this bill, a public servant
accused of corruption is allowed to turn around and file a lawsuit against the complainant accusing him of filing a
frivolous complaint. The government will provide a free advocate to the accused to help prove the citizen was
wrong, while the citizen has to fend for himself. If the complaint proves to be frivolous, the minimum sentence for
the citizen is two years. But if the corruption charges are proved, the minimum sentence for the public servant is just
six months!
Will then any citizen dare raise a voice against corruption?
“GOVERNMENT'S LOKPAL IS DANGEROUS”
If the PM is involved in corruption, then CBI
would investigate, not the Lokpal.
(CBI directly comes under PM. How will CBI
investigate its own boss?)
Lokpal, which is an independent body, would
investigate PM.
(If govt.'s doesn't want PM's corruption to be
investigated, let them amend constitution upfront
rather than making a pretense of investigations by
CBI.)
A committee of three judges from same
court will give permission for investigation
against the accused judge. (How will
judges from the same court give permission
to investigate their colleague judge?)
A seven member bench of Lokpal will give
permission after an open hearing.
If a MP votes or puts up a question in
parliament in return for a bribe, then
he/she could be investigated by a
committee of other MPs as is the present
system. (In the past 62 years, many
instances of MP's taking bribe have
surfaced but not even a single instance has
been honestly investigated nor any MP
sent to jail.)
The investigation would be done by an independent
Lokpal.
Every department will declare its citizen
charter specifying work to be done, the
officer responsible, and time required.
However, it doesn't state what happens in
case of dereliction of duty.
(Today, any work like license, ration card,
business permits, etc. in a government
department requires the citizen to pay a
bribe. Why will the department change
from this modus operandi when there are
no penalties for non-performance?)
If the citizen charter is violated, then the Lokpal
would penalize the concerned officers, and the
penalty would go to the complainant as
compensation
Corruption of
Prime
Minister
Corruption
within
Judiciary
Corruption of
Mps
Corruption
Faced by the
Common
Citizen
1. In a ten-member Selection Committee,
six are politicians, of which five will be
from the ruling party. (This kind of
system will increase the probability
that a corrupt persons and those
favorable to ruling party are finally
selected.)
2. Selection process will be decided by
Selection Committee.
1. Selection Committee would comprise of two
politicians, four judges and head of two
independent constitutional authorities.
2. The Search Committee would comprise of civil
society members and retired constitutional
authorities.
3. A detailed selection process has been
described, which would be transparent and
have people's participation.
Selection of
Lokpal
Anna Hazare's Jan Lokpal Government's Draft
The members of Lokpal would be
accountable to the government. Only
government can file a petition in the
Supreme Court for their removal.
The accountability of the Lokpal members would be
to the public. Any citizen can file a petition in the
Supreme Court for removal of a corrupt Lokpal
member.
Only group 'A' officers of the Central
Government would come under the
jurisdiction of Lokpal, while the lower level
officers and the state employees would be
left out. (So where would the common
citizen go to complain about corruption in
licensing, Panchayat, Schools, Hospitals,
rations, etc.?)
All the employees of Central Government will be
under Lokpal's ambit. On similar patterns of Lokpal
, Lokayaukta will be set up at state level and all the
employees of state government will be under its
ambit.
Corruption
within Lokpal
Staff
Jurisdiction of
Lokpal
The CVC is responsible of protecting the
whistleblowers. However, the CVC neither
has the capacity nor the legal powers
required to protect whistleblowers.
It should be Lokpal's responsibility to protect the
whistleblowers. The Lokpal has been given sufficient
powers for the same.
Whistleblower's
Protection
The power to remove officers lies with the
minister of that particular department.
(Since the minister also gets a cut out of
the money that is taken as bribe, corrupt
officers are rewarded rather than
punished)
Maximum punishment for corruption is 10
years.
The decision to remove a corrupt officer lies with a
bench of Lokpal members which would hear such
cases in public.
The maximum sentence is life imprisonment.
Officers senior in rank would attract stiffer
punishment.
Removal of
Corrupt
Officers
Punishment
for Corruption
The members of Lokpal would be
accountable to the government. Only
government can file a petition in the
Supreme Court for their removal.
The accountability of the Lokpal members would be
to the public. Any citizen can file a petition in the
Supreme Court for removal of a corrupt Lokpal
member.
Accountability
of Lokpal
Members
Anna Hazare's Jan Lokpal Government's Draft

Friday 19 August 2011

ராம்லீலா மைதானம் அன்னா ஹசாரே


புதுடில்லி: ஜன் லோக்பால் மசோதா உருவாக்கிட வலியுறுத்தி நான்கு நாட்கள் சிறையில் இருந்து இன்று காலை (11. 42 மணிக்கு ) வெளியே வந்த இவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக நின்று, வாழ்க அன்னா , வாழ்க அன்னா என்றும் ஊழலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேவுக்கு பூ மழை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ போராட்டம் நடத்தவிருக்கும் ராம்லீலா மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் எவ்வித களைப்புமின்றி ஆதரவாளர்களை பார்த்து இரண்டு கைகளை உயர்த்தி காட்டினார். இவர் வெளியே வந்ததும் வாசிலில் காத்திருந்த பத்திரிகையாளர்கள், டி.வி., காமிரா மேன்கள் பேட்டி எடுத்தனர். இவரது ரிலீசையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 
ஜெயில் வாசலில் ஹசாரே பேட்டி: ஜெயில் வாசலில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே 64 ஆண்டுகள் கழிந்தும் நாம் இன்னும் முழுமையான சுதந்திரம் பெறவில்லை என்றார். தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில்; மக்கள் அமைதி காக்க வேண்டும். ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். காந்தி நடத்திய போருக்கு பின்னர் தற்போது 2 வது சுதந்திர போர் துவங்கி இருக்கிறது. இது இப்போது தீயாக எரிய துவங்கியிருக்கிறது. ஊழல் ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பின்னர் தொடர்ந்து அவர் ராஜ்காட் புறப்பட்டு சென்றார். அங்கு காந்திசமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மைதானம் நோக்கி செல்கிறார். இவர் செல்லும் வாகனத்தை தொடர்ந்து காத்திருந்த ஆதரவாளர்கள் இவர் பின் அணிவகுத்து செல்கின்றனர்.



காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் நாடுமுழுவதும் தயாராகி விட்டனர். ராம்லீலா மைதானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரத்துவங்கியுள்ளனர். மேலும், ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வேகமாக பரவுகிறது. டில்லியில் தடையை மீறி, உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, காந்தியவாதி அன்னா ஹசாரேயை, போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தில் இருந்தே, மத்திய அரசின் இக்கட்டானநிலை வெளிச்சத்திற்கு வந்தது. அதை மாற்ற, மத்திய அரசு, ஹசாரே விடுவிப்பு அறிக்கையில் இருந்து, அடுத்தடுத்த சமரச நடவடிக்கைகளில் இறங்கியது. 40 மணி நேரம் நடந்த பேச்சுக்களுக்குப் பின், உண்ணாவிரதம் நடத்தப்படும் இடம் ராம்லீலா மைதானம் என்று முடிவானதுடன், சில அர்த்தமுள்ள நடைமுறைகளும் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 


இதற்கான ஒப்பந்தம் நேற்று காலை தான் உறுதியானது. இருப்பினும், ராம்லீலா மைதானம் தயாராகாததால், நேற்றும் திகார் சிறையிலேயே ஹசாரே, உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டார். ராம்லீலா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தை ஹசாரே முறைப்படி துவக்குகிறார். இதற்காக, இன்று திகார் சிறையிலிருந்து வெளியே வருகிறார். இத்தகவலை அவரது நெருங்கிய ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 
ஆர்.கே.சிங் பேட்டி: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து நேற்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறியதாவது: போராட்டம் நடத்துவது குறித்து, ஹசாரே குழுவினருடன் டில்லி போலீசார் சுமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், அரசு தலையிடவில்லை. செப்டம்பர் 2ம் தேதி (15 நாட்கள்) வரை, ராம்லீலா மைதானத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் என்றால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் விஷயத்தில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது பொருந்தும். டாக்டர்கள் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைப்பாளர்களுக்கும், டில்லி போலீசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிங் கூறினார்.

கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.

தடை வாபஸ்: ஹசாரே முதலில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த ஜே.பி. பார்க் உட்பட மத்திய டில்லி முழுவதும் பிறப்பித்து இருந்த தடை உத்தரவை, டில்லி போலீசார் நேற்று வாபஸ் பெற்றனர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளுடன் , நேற்று இரவுதான் மைதானம் தயாரானது.

ஊர்வலம்: திகார் சிறையிலிருந்து இன்று காலை வெளியே வரும ஹசாரே, தனது குழுவினருடன் ஊர்வலமாக ராம்லீலா மைதானம் செல்கிறார். இத் தகவலை, சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஹசாரேக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் நன்றாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு எதையும் உட்கொள்ளவில்லை' என்றார்.

மக்கள் தயார்: இன்று ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும் அலை, நாடு முழுவதும் அதிகமாக பரவுகிறது. ஹசாரேயின் ஆதரவாளர்கள் அனைவரும் ராம்லீலா மைதானத்தை நோக்கி வாருங்கள் என, அவரது குழுவில் இடம்பெற்ற மேதா பட்னாகர் நேற்று அழைப்பு விடுத்தார். ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு உணர்வுக்கு முதல்கட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது. இதனால், பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக சிவில் அமைப்புகள் நடத்தும் எதிர்ப்பு உணர்வு தவறானதாகாது என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது.


ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானம், டில்லி ரயில் நிலையம் அருகில் உள்ளது.
 

Thursday 18 August 2011

அன்னா ஹசாரே யார்?


Anna Hazareஇன்று இந்திய மக்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பி, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்கினார்? இந்த கேள்விகளுக்கு இதோ விடை:
விவேகானந்தரின் புத்தகத்தை படித்தார்: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கும் அன்னா ஹசாரே, ஒரு கட்டத்தில் தற்கொலை‌ செய்து கொள்ள முடிவு செய்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து, மனித பிறவிக்கு அர்த்தம் காண முடியாமல் இந்த முடிவை எடுத்தார். தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்று இரண்டு பக்க கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவர் டில்லி ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்ததும் அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மனித சமுதாயத்திற்கு சேவை புரியவே இந்த மனிதப் பிறவி என்பதை அவர் அ‌தன் மூலம் உணர்ந்து கொண்டார். அவருடைய வாழ்க்கையும் மாறியது.


ராணுவத்தில் பணியாற்றி விவசாயிகளுக்காக போராடியவர் : இளைஞராக இருந்தபோது இந்திய ராணுவத்தில் சேர்ந்த அன்னா ஹசாரே, 15 ஆண்டுகள் அதில் பணியாற்றி உள்ளார். 1978ல் விருப்ப ஓய்வு பெற்ற அவர், தமது 39வது வயதில் மகாராஷ்டராவில் உள்ள தமது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அங்கு விவசாயிகள் படும் பாட்டைக் கண்டு அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அங்கு அவர் துவக்கி மழைநீர் சேமிப்பு திட்டம், அந்த குக்கிராமத்தை ஒரு மாதிர கிராமமாக மாற்றியது. அவருடைய போராட்டங்கள் காரணமாக அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைந்தது; மின்சாரம் வந்தது; விவசாயிகளுக்கான நலத்திட்ட்ங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கிராம மக்கள் அவரைப் போற்றத் தொடங்கினர். 


பல அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய பெருமை உண்டு : ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் இங்கேதான் துவங்கியது. கிராமப்புற வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழலை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். இதற்காக ஒரு இயக்கத்தையும் துவக்கினார். அவருடைய பிரதான ஆயுதமாக உண்ணாவிரதமே இருந்தது; அரசியல்வாதிகளைக் குறி வைத்தே போராட்டங்களை நடத்தினார். 


மகாராஷ்டிர அரசியல்வாதிகளான சரத் பவார் மற்றும் பால் தாக்கரே, இவருடைய போராட்டங்களைக் குறை கூறி வந்தனர். ஆனால் அன்னா ஹசாரேயின் ஆயுதம் வலுவானதாக இருந்ததால் 1995- 96ல் அப்போதைய சிவசேனா- பா.ஜ., அரசு, 2 ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிதாயிற்று; 2003ம் ஆண்டு, காங்கிரஸ்- தேசியவாத அரசு, 4 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டியதாயிற்று.


இவ்வாறு மாநில அளவில் ஊழல் எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற அன்னா ஹசாரே தற்போது தேசிய அளவில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைத் துவக்கி மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார்.


இன்று மாலை திகார் ஜெயிலில் இருந்து வெளியே வரும் இவர் திறந்த ஜீப் மூலம் ஆதரவாளர்கள் புடை சூழ டில்லி ராம்லீலா மைதானத்திற்கு வருகிறார். அவர் இங்கு போலீஸ் அனுமதியுடன் 15 நாட்கள் உண்ணாவிரத அறப்போரை துவக்குகிறார்.

 

Wednesday 17 August 2011

அன்னா ஹசாரே - நாடு முழுவதும் எழுச்சி


புதுடில்லி: வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

 
வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை டில்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண்பேடி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சாந்தி பூஷன் மற்றும் கிரண்பேடி ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரே வடக்கு டில்லியில் உள்ள ஆபிசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டார். அங்கு சென்ற நீதிபதிகள், ஹசாரேவிடம் சில உறுதிமொழிகள் கோர, அதை ஹசாரே மறுத்ததையடுத்து, அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அவருடன் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
இந்நிலையில், ஹசாரே கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்களில் ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு நகரங்களில் வக்கீல்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.டில்லியில் இன்று மதியம் ஹசாரேவுக்கு ஆதரவாக ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதே போல், டில்லியில் சுப்ரீம் கோர்ட் வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை வக்கீல்கள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியில் இன்று மாலை ஹசாரேவுக்கு ஆதரவாக தீப ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
காங்., உயர்நிலைக்குழு: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுந்துள்ள அலையைப்பார்த்து மிரண்டு போயுள்ள காங்., இன்று காலை உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அன்னா ஹசாரே விவகாரத்தால் நேற்று முழுவதும் பார்லிமென்ட் முடங்கியுள்ள நிலையில், அது குறித்தும், ஹசாரேயின் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

Friday 12 August 2011

சேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி



சேலம், விழுப்புரம்  பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதிசேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி
சேலம், ஆக 12: இன்று முற்பகல் 11.45 மணி அளவில் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், திட்டக்குடி பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சுமார் 20 விநாடிகள் இந்த நில அதிர்வு நீடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நில அதிர்வால் அச்சம் அடைந்த மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பாக சாலையோரங்களில் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம், திட்டக்குடி,  பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

A JOKE STORY


IA Interior Architectsஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"       -    நியாயமான ஒரு கேள்வி
-
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான்
வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".



"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாராஇருக்கேன். எனக்கு இத
செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச
பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales
Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு
பதில் சொல்றது இவங்க வேலை.



அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு
MBAபடிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க.500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு
குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி
முடிக்கமுடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்தெரியாது, என்ன
செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க
deliverபண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு
இதுவேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR
raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலைபார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம்
கொடுக்கணும்"னுசொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள்
ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

 அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னுசொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."



அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன்
குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"



"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி
பொடிங்கஇருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா
முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர்,டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோடமானம்,
மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி
வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா
தான்இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய
முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக்
குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"



அப்பா:  "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி
விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம்
மீட்டிங்ல வச்சி நீஇருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி
எதாவது சொல்லி அவனகுழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள்
தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு
வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண
பண்ணிஇருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற
மாதிரியும் நடிக்கஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க
ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு
வர்றதுமாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க
வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரியஆரம்பிக்கும்.


அப்பா  :  "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."
Editor:Rameshkumar

Wednesday 10 August 2011

Monday 8 August 2011

Dr . APJ அப்துல் கலாம் ஒரு சுவையான நிகழ்ச்சி


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTlhx-AfC1tqZFgqptlDn5LCKOF1f4GIYnQ3HgMQPG-fEqmBUVrமாசு , மருவற்ற  நம் சம காலத்து மகாத்மா  - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த  Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. 

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்...

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா? 

கலாம்: இல்லை ஐயா 

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா? 

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

எப்பூடி...?

  
இதே போன்று , சுவையான நிகழ்வு - ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் நடந்ததாக கேள்வி.
கரென்ட் கம்பத்திலே கைவைச்சுத்தான் , நான் கரென்ட் இருக்கிறதை நம்புவேன்னு சொன்னா, நீங்க கடவுளையும் பார்த்து , உணர்ந்து அதுக்கு அப்புறம் நம்புனா, போதும்...

இல்லையா , உணர முயற்சிப்போம்.. நானும் உங்க கூட சேர்ந்துக்கிடுறேன். ...

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_9909.html#ixzz1URiAlZdy