கிறிஸ்துமஸ் திருவிழா

Monday 12 December 2011

கிறிஸ்துமஸ் திருவிழா





                     

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் துயர் துடைக்கஇறைவன் மண்ணில் அவதரித்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். தம்மை சிலுவையில் அறைந்தபாவிகளையும் கருணை கூர்ந்து மன்னித்தார். இறந்த 3-ம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணுலும் ஏகினார். அவர் தான் இயேசு கிறிஸ்து.
இயேசுகிறிஸ்தவர்களின் கடவுள். ஆனாலும் அவருக்கு சாதி மத பேதம் கிடையாது. இன்றும் பலர் சாதி மத பேதமின்றி இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமசை கொண்டாடி        வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் விழாவைப் பற்றிய சில தகவல்களும்அதன் பின்னணி நிகழ்வுகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
கிறிஸ்துமஸ் என்பது உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
இயேசு அவதரித்த நாளே கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். இயேசுடிசம்பர் மாதம் 25-ம் தேதிதான்பிறந்தாரா என்பது குறித்து சில சந்தேகங்களும் நிலவுகிறது. அவர் டிசம்பர் 25-ம் தேதிதான் பிறந்தார் என்பது குறித்து நிச்சயமாக யாரும் உறுதியாககூறுவதில்லை.
பண்டைய காலத்தில் டிசம்பர் மாதம் 25-ம் தேதி பெகன்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்விருந்துண்டு கேளிக்கைகளில் ஈடுபடும்நாளாக இருந்ததால்அன்றைய தினம் விடுமுறை தினமாக இருந்தது. அவர்கள் இயேசுவையும் நம்புவதில்லை.
3-வது நூற்றாண்டின் போது ரோம் நகர பிஷப்பாக டெலஸ்போரஸ் என்பவர் இருந்தபோது டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடமுடிவு செய்யப்பட்டது. இது நடைபெற்றது கி.பி. 127 ஆண்டுக்கும் கி.பி. 139-ம் இடைப்பட்ட பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது,
இயேசுவின் பிறந்த நாள் குறித்து பல் வேறு கருத்துக்கள்மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்த நிலையில்ரோம் நகர சர்ச் டிசம்பர் மாதம்25-ம் தேதியை கிறிஸ்து பிறந்ததினமாக கொண்டாடுவது என முடிவு செய்தது. இந்த முடிவு கி.பி. 310-ம் ஆண்டுஎடுக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக கீழை நாடுகளின் சர்ச்சுகளால் இது ஒப்புக்கொள்ளப்படாமல்இருந்தாலும் 5-ம் நூற்றாண்டில்தான் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் கிறிஸ்துமஸ் எப்போது ?File:Giorgione 014 crop.jpg
5-ம் நூற்றாண்டில் கிறிஸ்து பிறந்த நாள் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரோம் நகரில்இயேசு பிறந்த தேதிஆண்டு குறித்து மீண்டும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால்இதற்கு முன்பே இயேசுவின் சீடரான மத்தேயுவின் போதனைகளில் இயேசுஹீரோட்மன்னன் காலத்தில் பெத்தலஹேமில் பிறந்தார் என கூறியிருந்தார்.
ஹீரோட் மன்னர் இறந்ததற்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கும் இடையே சில காலஇடைவெளி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எங்குமே இயேசு கிறிஸ்து எந்த ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.அவர் ஏ.யு.சி. 747-ன் மத்திய பகுதியிலோஅல்லது ஏ.யு.சி749-ம் ஆண்டின்இறுதியிலோ பிறந்திருக்கலாம். (ஏ.யு.சி. என்பது அன்னா உர்பிஸ் காண்டிடா,அதாவதுரோம் நகரம் உருவானதிலிருந்து கணக்கிடப்படுவது). கி.மு.7-ம்நூற்றாண்டுக்கும்கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இயேசுபிறந்திருக்கலாம் என்பதே சரியான கணிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பெஜன்கள் விழா மார்ச் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. அந்த நாளைகிறிஸ்தவர்கள்கேப்ரியல் தேவதை மேரிமாதாவை வந்து பார்த்த நாளாககொண்டாடுகிறார்கள். அதனுடன் மாதங்கள் சேர்த்து டிசம்பர் மாதம் 25-ம் தேதிஇயேசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
தற்போது கிடைக்கும் பல தகவல்களின் படி கிறிஸ்துமஸ் முதலில் கொண்டாடப்பட்டவருடம் கி.பி. 534-ம் ஆண்டு என தெரியவந்துள்ளது.

இயேசுவின் தரிசனம்…


 இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் அவரைப் பார்ப்பதற்காக கிழக்கு பகுதியிலிருந்து இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக சாஸ்திரிகள்ஜெருசலேம் நகருக்கு வந்தனர்.
கிழக்குப் பகுதியில் உதித்த நட்சத்திரத்தைப் பார்த்து அவர்கள் இயேசு பிறப்பை உணர்ந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன்ஏரோது மன்னன்அதிசயித்தான். ஜெசருசேலம் நகர மக்களும் அதிசயித்தார்கள்.
இயேசு எங்கு பிறந்திருப்பார் என அறிய வேத ஆச்சாரியர்களைக் கூப்பிட்டு ஏரோது மன்னன் விசாரித்தான். அதற்கு அவர்கள்,பெத்தலஹேமில் பிறப்பார்என தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லவும்சாஸ்திரிகளை அழைத்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதை பார்த்து விட்டு வருமாறும்வந்து என்னிடம்சொல்லுமாறும் கூறி அனுப்பி வைத்தான்.
இதைத் தொடர்ந்து விண்ணில் தோன்றிய நட்சத்திரம் வழி காட்ட அதை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.
நட்சத்திரம் அவர்களை இயேசு பிறந்த வீட்டின் முன் இட்டுச் சென்றது. அங்கு மரியாளின் மடியில் கருணையே உருவாக தவழ்ந்து கொண்டிருந்தார் இயேசு பிரான்.குழந்தை இயேசுவையும்மரியாளையும் வணங்கி தாங்கள் கொண்டு சென்றிருந்த பொன்னையும்,பொக்கிஷங்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.
கிறிஸ்துமஸ் திருவிழா 
டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் தம் கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். திருப்பலியின்போது கிறிஸ்து பிறப்புவிழாவின் பொருள் என்ன என்பது மறையுரை வழியாக விளக்கப்படும். ஒவ்வொரு கோவிலிலும் கிறிஸ்துமஸ் குடில் செய்து வைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலும் குடில் செய்து வைக்கும் பழக்கம் உண்டு. அக்குடிலில் குழந்தை இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். கூடவே, இடையர்கள், இடையைச் சார்ந்த ஆடுகள், தொழுவத்தில் மாடு, கழுதை போன்ற உருவச்சிலைகளும் இடம்பெறும்.

வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.

கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

0 comments :

Post a Comment